நாட்டில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

Date:

இலங்கையிலிருந்து 500 தொழுநோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், இது கடந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனவும் தொழுநோய் கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் கொழும்பு மாவட்டத்தில் 86 நோயாளர்களும், கம்பஹா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா 48 நோயாளர்களும், காலி மாவட்டத்தில் 36 நோயாளர்களும், ஏனையவர்கள் ஏனைய மாவட்டங்களில் இருந்தும் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு, கொழும்பு, கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் காலி ஆகிய நான்கு மாவட்டங்களில் இருந்து 218 நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், ஏனைய 21 மாவட்டங்களில் இருந்து 282 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தொழுநோயைக் குணப்படுத்துவதற்கு மிகவும் வெற்றிகரமான மருத்துவ முறைகள் இருந்தும், சமூகத்தில் இன்னும் நிலவும் தவறான எண்ணங்களால், பல நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை கிளினிக்குகளுக்குச் செல்லாமல் தங்கள் நிலையை மோசமாக்கியுள்ளனர்.

இந்த நோய்க்கு முறையான சிகிச்சை அளித்தால், ஆறு மாதங்களுக்குள் குணமாகி விடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...