இராமாயண காலத்துடன் தொடர்புடைய இடங்களை மேம்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

Date:

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கும் அயோத்திக்கும் இடையிலான ஆழமான உறவு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன் இரு நாடுகளுக்குமிடையிலான கலாசார உறவுகள் மற்றும் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

இலங்கையில் இராமாயண காலத்துடன் தொடர்புடைய பல்வேறு இடங்களை மேம்படுத்துவது குறித்தும் அவர்கள் விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.

இதன் மூலம் இந்தியாவின் குடிமக்கள், குறிப்பாக உத்தரபிரதேசம், இலங்கையில் உள்ள இராமாயண தலங்களைப் பார்வையிடுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இந்தநிலையில் இராமரின் சகோதரன் இலட்சுமணனைக் குணப்படுத்துவதற்காக அனுமான் கொண்டு வந்ததாக கூறப்படும் சஞ்சீவனி மூலிகை செடிகளை உத்தரபிரதேசத்தில் பெரிய அளவில் நட வேண்டும் என்ற இலங்கை உயர்ஸ்தானிகரின் கோரிக்கையை, உத்தரபிரதேச முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார் என்று இந்திய செய்தி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வலுவான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை...