இன்று ஜப்பானில் G7 உச்சநிலை மாநாடு!

Date:

G7 தொழில்வள நாடுகளின் உச்சநிலை மாநாடு இன்று ஜப்பானில் நடைபெறுகிறது. உக்ரேனுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள ரஷ்யா மீது தடைகளை விதிப்பது, சீனாவின் அதிகரித்துவரும் செல்வாக்கைச் சமாளிக்கும் வழிகளை ஆராய்வது – அந்த இரண்டு முக்கிய அம்சங்களில் G7 தலைவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.

பிரிட்டனும், ஜப்பானும் தற்காப்பு உறவை வலுப்படுத்துவதற்காக ஹிரோஷிமா (Hiroshima) உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. ஜப்பானில் இனி நடைபெறவிருக்கும் கூட்டு ராணுவப் பயிற்சியில் பிரிட்டன் கூடுதல் துருப்புகளைப் பங்கேற்கச் செய்ய உடன்பாடு வழியமைக்கும். பொருளியல் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் புதிய தொழில்நுட்பங்களில் இணைந்து பணியாற்றவும் இரு நாடுகளும் முயல்கின்றன.

பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனாக் (Rishi Sunak), ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவைச் (Fumio Kishida) சந்தித்தபோது இருதரப்பு உடன்பாடு கையெழுத்தானது. இந்தோ – பசிபிக் வட்டாரத்தின் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் நோக்கில் டொக்கியோவுடன் பாதுகாப்பு உடன்பாடு செய்துகொள்ளப்பட்டதாகத் திரு. சுனாக் கூறினார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...