மே 9 வன்முறை சம்பவம்: அமைச்சர்கள் உட்பட 39 பேர் தாக்கல் செய்த மனு கைவிடப்பட்டது!

Date:

கடந்த வருடம் மே 09 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரி அமைச்சர்கள் உள்ளிட்ட 39 பேர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று (22) மீளப் பெறப்பட்டது.

இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சார்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், நடந்த சம்பவங்கள் குறித்து முறையான விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தனது கட்சிக்காரர் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, அதில் திருப்தியடைவதாகவும், அதனடிப்படையில் குறித்த மனுவை மீளப் பெறுவதற்கு அனுமதி வழங்குமாறும் கோரினார்.

எனினும், அந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அதற்கு ஆட்சேபனை தெரிவித்தார்.

எனினும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் மரிக்கார் ஆகியோரடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் குறித்த மனுவை மீளப்பெற அனுமதி அளித்தது.

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஷெஹான் சேமசிங்க, பிரசன்ன ரணவீர மற்றும் மே 9ஆம் திகதி இடம்பெற்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட 39 பேர் இது தொடர்பான மனுவை முன்வைத்திருந்தனர்.

Popular

More like this
Related

இலங்கை – இத்தாலி இடையே சாரதி அனுமதிப்பத்திர ஒப்பந்தம் ஏப்ரல் முதல் அமுல்!

இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையேயான நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திர உரிமம் பரஸ்பர...

‘அல் மன்ஹஜ்ஜுஸ் ஸஹீஹ்’: சமூக ஒருமைப்பாட்டை பேணுவதில் கவனம் செலுத்த வேண்டும்

இலங்கைத் திருநாட்டின் தேசிய வரைபடத்தில், முஸ்லிம் சமூகம் என்பது எப்போதும் 'வேற்றுமைக்குள்...

சொத்து விபரங்களை வழங்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு 2 வார காலக்கெடு!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், தனது சொத்து மற்றும் பொறுப்புக்கள்...

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல...