கம்பஹா மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்!

Date:

கம்பஹா மாவட்டத்தில் எதிர்வரும் சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் மேலும் அதிகரிக்கும் அபாயம்  நிலவுவதாக கம்பஹா மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
கம்பஹா மாவட்டத்திற்குள் பாரியளவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கம்பஹா மாவட்ட செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக டெங்கு நோயாளர்கள் உள்ள மாவட்டமாக கம்பஹா மாவட்டம் பதிவாகியுள்ளது.
நாட்டில் இதுவரை 36911 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.
இம் மாதத்தில் 7203 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இதில் கம்பஹா மாவட்டத்தில் 22 வீதமான நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 20 வீதமான நோயாளர்களும் பதிவாகியுள்ளதாக சமூக வைத்திய நிபுணர் இந்திக வீரசிங்க கூறியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் 25 வீதமானோர், பாடசாலை மாணவர்கள் என வைத்திய நிபுணர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Popular

More like this
Related

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...

நாடளாவிய ரீதியில் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களை தடுக்க 15 பொலிஸ் சிறப்புப் படைகள்!

நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் துப்பாக்கிச்...