ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை சற்று முன்னர் ஜப்பானில் நடத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஜப்பான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு ஜனாதிபதி தனது பாராட்டுக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது குறித்தும் ஜப்பானிய முதலீடுகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.