இலங்கையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை செப்டெம்பர் அல்லது நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டோக்கியோவில் ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடனாளர்களுடனான பேச்சுவார்த்தைகள் “குறிப்பிடத்தக்க” முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இலங்கை மார்ச் மாதம் சர்வதேச நாணய நிதியத்திலிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் பிணை எடுப்பை பெற்றுள்ளது.
கடந்த மாதம், பிரான்ஸ், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவை கடனை மறுசீரமைப்பதை ஒருங்கிணைக்க இருதரப்பு கடன் வழங்குநர்களிடையே பேச்சுவார்த்தைக்கான பொதுவான தளத்தை வெளியிட்டன.