இரசாயன உரங்கள் மீதான தடையின் தாக்கம் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் தேயிலை உற்பத்தி இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் 20% குறைந்துள்ளதுடன், 84 மில்லியன் கிலோ கிராமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் நீக்கப்பட்ட இரசாயன உரங்கள் மீதான தடையானது தேயிலை உற்பத்தியில் 16% வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று சந்தையில் போதியளவு உரம் காணப்பட்டாலும் விலை மிக அதிகமாகவே காணப்படுவதாக தோட்டக்காரர்கள் சங்கத்தின் செய்தியாளர் ரொஷான் ராஜதுரை தெரிவிக்கின்றார்.
2023 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி வருவாய் 1.4 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அதற்கு குறைந்தது 250 மில்லியன் கிலோகிராம்கள் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.