இன, மத மோதல்கள் மீண்டும் தலைதூக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு: பந்துல

Date:

நாட்டில் இன அல்லது மத முரண்பாடுகள் மீண்டும் தலைதூக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பாதுகாப்பு மற்றும் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினரிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் குழுக்கள் தொடர்பில் சில புலனாய்வு தகவல்கள் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இனக்கலவரங்கள் மற்றும் ஏனைய பயங்கரவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள நாடு என்ற வகையில், வன்முறையை தூண்டும் நபர்களை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமென கருதுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து சமூகங்களும் இணைந்து வாழ்வதற்கான அமைதியான சூழலை உறுதி செய்வதற்கு தேவையான உத்தரவுகள் ஜனாதிபதியினால் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் எனவும் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்..

Popular

More like this
Related

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு பெருமை சேர்த்த ருமேஷ் தரங்க!

2026 கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இலங்கையின் 23 வயதான ருமேஷ் தரங்க...

யாழ்ப்பாணம் மற்றும் கண்டி வரை மெட்ரோ பேருந்து!

எதிர்வரும் நாட்களில் புதிய மெட்ரோ பேருந்துகள் சேவையில் இணைக்கப்படவுள்ளதுடன், ஆண்டின் இறுதிக்குள்...

புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு சலீம் ஆசிரியரை தலைவராகக் கொண்ட புதிய நிர்வாக சபை தெரிவு.

நேற்று புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கான புதிய நிர்வாக சபை தெரிவுக்குரிய நிகழ்வுகள்...

பல்கலைக்கழக பிரவேசத்திற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியீடு!

2025 க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகங்களில் உள்ள ஒவ்வொரு...