எரிபொருள் நிலையங்களுக்கு போதுமான எரிபொருளை வழங்க தீர்மானம்

Date:

அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு இருப்புகளை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றம் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தைத் தொடர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கூடுதல் நேரச் செலவுகளைக் குறைக்க, கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் இயங்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விலைக் குறைப்பை எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிலையங்கள் முன்பதிவுகளை வழங்காதது, குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தம் மற்றும் ஒதுக்கீடு அதிகரிப்புக்குப் பிறகு நுகர்வோரின் உடனடி தேவை அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் நிலையங்களில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

திரைப்படத் துறையில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியினால் தீர்வு

சினிமாவின் முன்னேற்றம் நாட்டு மக்களின் ஆன்மீக வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது என்றும்,...

பெண்களுக்கு எதிரான டிஜிட்டல் வன்முறையை எதிர்த்துப் போராட ‘அவளுக்கான வாக்குறுதி’ பிரசாரத்தை ஆரம்பித்த Inglish Razor.

2025 நவம்பர் 25: பெண்களுக்கு எதிரான வன்முறையை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச தினத்தை...

மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை: மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்தல்.

நாட்டின் இரண்டு பகுதிகளின் மக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவித்து மண்சரிவு சிவப்பு...

நாட்டில் வேலையின்றி இருக்கும் 365,951 பேர்: பிரதமர் தகவல்!

நாட்டில் தற்சமயம் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய...