அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதுமான அளவு இருப்புகளை வழங்குவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எரிசக்தி மற்றம் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில், இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தைத் தொடர இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் என்பவற்றிற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், கூடுதல் நேரச் செலவுகளைக் குறைக்க, கடந்த 4 மாதங்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையம் இயங்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விலைக் குறைப்பை எதிர்பார்த்து கடந்த சனிக்கிழமை முதல் எரிபொருள் நிலையங்கள் முன்பதிவுகளை வழங்காதது, குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காதது, விலை திருத்தம் மற்றும் ஒதுக்கீடு அதிகரிப்புக்குப் பிறகு நுகர்வோரின் உடனடி தேவை அதிகரிப்பு ஆகியவை எரிபொருள் நிலையங்களில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.