உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களுக்குப் புதிய கட்டுப்பாடு

Date:

உணவு பொருள்கள் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விளம்பரங்களை புதிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்தி கடுமையாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, 1980ஆம் ஆண்டின் 26ஆம் இலக்க உணவுச் சட்டத்தின் கீழ் புதிய ஒழுங்குவிதிகள் கொண்டுவரப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய ஒழுங்கு விதிகளுக்கு அமைய உணவு பொருள்கள் தொடர்பான விளம்பரங்களை மூன்றாம் தரப்பினர் ஊடாக செய்யும்போது அதற்கு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அனுமதியை பெற்றுக்கொள்வது கட்டாயமாகும்.

விளம்பரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உணவுச் சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள், அரச அச்சக திணைக்களத்தின் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

அடுத்த 6 மாதங்களில் இந்த புதிய ஒழுங்குவிதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...