உள்நாட்டு பிரச்சினைகளை ஜெனிவாவுக்கு கொண்டு செல்லப்போவதில்லை: அரசாங்கம் தீர்மானம்

Date:

இலங்கையின் உள்நாட்டு பிரச்சினைகளை தொடர்ந்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவுக்கு எடுத்துச் செல்வதில்லை என அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அரசாங்கம் ஸ்தாபித்துள்ள உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடாக உள்நாட்டு பிரச்சினைகள் சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்தி அவற்றுக்கு தீர்வை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழுவின் தலைவராக சட்டத்தரணி அசங்க குணவர்தன செயற்பட்டு வருகிறார்.

வருடந்தோறும் ஜூன் மாதத்தில் ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் ஆணைக்குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதுடன் அது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க உட்பட மேற்குலக நாடுகள் எடுக்கும் என கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் இது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கை என சிங்கள பத்திரிகை தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

Online விளையாட்டிற்கு அடிமையான மாணவன் தவறான முடிவெடுத்து தற்கொலை!

யாழ்ப்பாணத்தில் ஆன்லைன் விளையாட்டிற்கு (Online Games) அடிமையான 19 வயதுடைய பாடசாலை...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்று (30) பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...