தங்கம் கடத்திய அலி சப்ரிக்கு இல்லாமல் போகும் ‘VVIP’ வரப்பிரசாதம்!

Date:

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விஷேட பிரமுகர்  வெளியேறல் பகுதியூடாக தங்கம்  மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கடத்தி வந்து மாட்டிக்கொண்ட, பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு உரித்தான  அதி முக்கிய பிரமுகர் விஷேட வரப்பிரசாதத்தை (VVIP Facility) இரத்து செய்ய தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

இதற்கான ஆலோசனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்ப அபேவர்தன  பாராளுமன்ற அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

அலி சப்ரி ரஹீம், தங்கம் கடத்தி மாட்டிக்கொண்ட பின்னர், அபாரதம் செலுத்திவிட்டு விடுதலையாகியுள்ளார்.

இது தொடர்பில் அவருக்கு எதிராக நடவடிக்கை கோரி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர்  சபாநாயகரிடம் மனு கொடுத்துள்ளனர்.

இந் நிலையில் அது தொடர்பில் ஆராய்ந்துள்ள சபாநாயகர், குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு விமான நிலையத்தில் கிடைக்கும்  அதி விஷேட பிரமுகர் வரப்பிரசாதத்தை  ரத்து செய்ய  உரிய சட்ட ஆலோசனைகளை பெற்று நடவடிக்கை எடுக்குமாறும் இதன்போது சிவில் விமான சேவைகள்   திணைக்களத்தின் நிலைப்பாட்டினையும் பெற்றுக்கொள்ளுமாறும் அறிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள தூதரகங்களுக்கு பலத்த பாதுகாப்பு!

இலங்கையில் அமைந்துள்ள தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விசேட...

கடந்த கால அனுபவங்களால் மக்கள் அச்சப்படுவது இயல்பானது: அரசிடம் முறையான தீர்வு உண்டு.:நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது மத்தியகிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழல் காரணமாக ஜனாதிபதி...

இலங்கையர்களுக்காக விசேட அவசர அழைப்பு எண்கள் அறிமுகம்!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தினால் அங்குள்ள சுமார் 10 இலட்சம்...

ஈரான் ஆன்மீகத் தலைவரின் மறைவு: அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனம் இரங்கல்

ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயதுல்லா அலி கமேனி மறைவு குறித்து, அகில...