எரிபொருள் ஒதுக்கீடு முறை பற்றிய அறிவிப்பு!

Date:

சீனாவின் சினோபெக் நிறுவனம் இந்த நாட்டில் எரிபொருள் விநியோகத்தை ஆரம்பித்தவுடன் தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு முறை இரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்துள்ளார்.

சீனாவின் சினோபெக் நிறுவனம் மே 22 அன்று நாட்டின் எரிபொருள் சந்தையில் நுழைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகத்துடன் ஒப்பந்தம் செய்தது.

அதன்படி, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நடத்தப்படும் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதற்கும் இலங்கையில் 50 புதிய எரிபொருள் நிலையங்களை நிர்மாணிப்பதற்கும் சினோபெக் அனுமதிக்கப்பட்டது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...