துருக்கி ஜனாதிபதி அர்தூகானை சந்தித்த சபாநாயகர்!

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, துருக்கி ஜனாதிபதி ரசெப் தையிப் அர்தூகானுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்ற தயிப் அர்தூகானின் உத்தியோகபூர்வ அரச வைபவத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கலந்துகொண்டார்.

இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான பல வருட கால இராஜதந்திர உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு சபாநாயகர் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் உலகையே உலுக்கிய துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முன் வந்த இலங்கைக்கு ஜனாதிபதி அர்தூகான் நன்றியும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

டிரம்பின் அமைதி திட்டத்தின்படி போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றது ஹமாஸ்!

ஏறத்தாழ கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போர் தற்போது...

போதைப்பொருள் தொடர்பான தகவல்களை வழங்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்!

நாட்டின் பல பகுதிகளிலும் ஹெரோயின், ஐஸ், கொக்கேயின் மற்றும் கஞ்சா உள்ளிட்ட...

இலங்கையில் அவசர எரிசக்தி துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தும் உலக வங்கி!

பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளை விட இலங்கை தொடர்ந்து கணிசமாக அதிக...

சிறுவர்களை ஆபாச செயற்பாடுகளுக்குள் தள்ளும் டிக்டொக் : ஆய்வில் தகவல் !

டிக்டொக் (TikTok) செயலியானது அதன் பரிந்துரைக்கப்பட்ட தேடல் சொற்கள் மூலம் இளம்...