ஹஜ் செய்வதற்கான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகும்: ஜம்இய்யதுல் உலமா பத்வாப் பிரிவு

Date:

இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு ஹஜ் கடமையாவதற்கான மாதிரி வழிகாட்டலொன்றை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு நேற்று வெளியிட்டுள்ளது.

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு நாட்டை விட்டுப் புறப்பட்டுள்ள நிலையில் ஹஜ் வழிகாட்டல் தொடர்பிலான மூன்றாவது வழிகாட்டலாக இதனை உலமா சபை வெளியிட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் ஹஜ் கடமைக்கான பணத்தை தன்னிடமிருக்கும் சொத்துக்களில் இருந்து பெறுவதற்கான வழிகள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

தன்னிடம் கைவசமுள்ள பணம், வேறு வருமானங்கள், தகுதிக்கு மேலதிகமான வீடு, வியாபாரத்தில் செய்துள்ள முதலீடுகள் இவற்றிலிருந்து பணத்தைப் பெற்று ஹஜ் செய்ய முடியும்.

இவற்றிலிருந்து பெறப்படும் பணம் ஹஜ்ஜுக்குச் சென்று வருவதற்கான தொகையை அடைந்து அத்தொகைப் பணம் அவருடைய பராமரிப்பில் உள்ளவர்களுக்குத் தேவையான செலவு மற்றும் அவர் வழங்க வேண்டிய கடன் தொகையை விட மேலதிகமானதாக இருந்தால் அவர் மீது ஹஜ் கடமையாகிவிடும் என குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தனக்குப் பொறுத்தமான வீடொன்றில்லாமல் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் மீது ஹஜ் கடமையில்லை எனவும் குறித்த வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலில் வழங்கப்பட்டுள்ள உதாரணத்தின்படி ஹஜ் செய்வதற்காக முகவர்களுக்கு வழங்க வேண்டிய தொகைக்குச் சமனான தொகையை வியாபாரத்தில் முதலீடு செய்திருக்கும் ஒருவர் அந்த முதலீட்டை மீளப் பெற்று ஹஜ் செய்வது கடமையாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டலின்படியே இலங்கை வாழ் முஸ்லிம்களின் மீது ஹஜ் கடமையாகிறது எனவும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வாப் பிரிவு தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பின்தங்கிய கிராம மக்களின் பிரச்சினைகளை நேரில் அறிந்த சர்வமதத் தலைவர்கள்

புத்தளம் மாவட்ட சர்வ மத அமைப்பு தேசிய சமாதானப் பேரவையுடன் இணைந்து...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார் ரணில்!

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை...

அதிக விலைக்கு விற்பனையாகும் தண்ணீர்: – பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரிக்கை

அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்களுக்கு பாவனையாளர் அலுவல்கள்...

மீலாதை முன்னிட்டு உரை, கருத்தரங்கு,மரம் நடல், இரத்த தானம் ஏற்பாடு செய்யுமாறு திணைக்களம் வேண்டுகோள்

இவ்வருட தேசிய மீலாத் விழாவை ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் கொண்டாடுவதற்கான அனுமதியை அரசாங்கம்...