2015 முதல் 2020 வரை 2.4 மில்லியன் வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன!

Date:

இலங்கையில் ஐந்தில் ஒருவர் கடந்த ஐந்து வருடங்களில் வாகனத்தை இறக்குமதி செய்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இவற்றில் 75% வாகனங்கள் வங்கிக் கடன் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வாகன இறக்குமதிக்கான வரிகளை டொலரில் செலுத்தும் முறையை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

2015 முதல் 2020 வரை 2,498,714 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:

2015 – 652,446 வாகனங்கள்
2016 – 466,986 வாகனங்கள்
2017 – 448,320 வாகனங்கள்
2018 – 496,282 வாகனங்கள்
2019 – 332,452 வாகனங்கள்
2020 – 102,228 வாகனங்கள்

Popular

More like this
Related

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...

பிலிப்பைன்சின் நெல் ஆராய்ச்சி நிலையத்திற்கு பிரதமர் விஜயம்

பிலிப்பைன்சின் சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தை பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய...