சாதாரண தரம், புலமைப்பரிசில் பரீட்சைகள் அவசியமா?

Date:

கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை மற்றும், 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகளின் அவசியம் தொடர்பில் விரைவாக தீர்மானமொன்றுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கல்வி நிபுணத்துவக் குழுவுடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலின்போது, மாணவர்களை 13 வருடங்கள் பாடசாலைக் கல்வியில் தக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜனாதிபதி, கல்வி பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை மற்றும், 05ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைகள் அவசியமா? என்பதுத் தொடர்பில் விரைவாக தீர்மானமொன்றுக்கு வர வேண்டுமென தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு சட்டரீதியாக குறித்த ஒரு மாதத்தை அறிவிக்க உள்ளதாகவும், இக்கட்டான சூழ்நி்லைகளில் தவிர பரீட்சை நடத்துவதற்கான மாதத்தை மாற்றுவதாக இருந்தால், பாராளுமன்றத்தின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் பாடசாலைகளில் தரமான கல்வி வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக ஆய்வு அலுவலகங்கள் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் ஜனாதிபதி இதன்போது அதிகாரிகளுக்கு விளக்கியுள்ளார்.

இலங்கையை பிராந்திய கல்வி மையமாக மாற்றும் நோக்கத்துடன், ஜனாதிபதியின் தலைமையில் 10 உறுப்பினர்களைக் கொண்ட ‘கல்வித்துறை அமைச்சர் குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

Popular

More like this
Related

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...

கொழும்பு, கம்பஹா மற்றும் காலி மாவட்டங்களில் விசேட சுகாதாரத் திட்டம்

‘Resolve to Save Lives’ எனும் சர்வதேச நிறுவனத்தின் 242,125 அமெரிக்க...

கதை சார்ந்த விருந்தோம்பலின் புதிய அத்தியாயத்தை இலங்கையில் ஆரம்பிக்கும் TONIK

Acorn குழுமத்தின் வலிமையும், உலகளாவிய அணுகுமுறையும் ஆதரவாக இருப்பதால், TONIK புதுமையான...