‘உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானம் எடுக்கவில்லை’

Date:

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெளிவுபடுத்தியுள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்..

​​உள்நாட்டு கடன் மேம்படுத்தல் வேலைத்திட்டம் தொடர்பில் நாட்டில் பல்வேறு தரப்பினரால் பரப்பப்படும் பொய்யான தகவல்கள் தொடர்பில் இராஜாங்க அமைச்சர்   கருத்து தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் அரசாங்கம் இறுதித் தீர்மானத்தை எடுக்கவில்லை என்றும், உள்நாட்டுக் கடனை மேம்படுத்துவது தொடர்பான உணர்திறனை மேலும் வலியுறுத்தியதுடன், இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மிகுந்த பொறுப்புடன் அணுகுவதாக உறுதியளித்தார்.

இலங்கையின் வங்கி மற்றும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்துவதற்காக மேம்படுத்தப்பட்ட இலக்கை அடைவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை அமைச்சர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு துறைமுகத்தை பாதுகாப்பாக வந்தடைந்த ‘ஐரிஸ் புஷேர்’ கப்பலில் இருந்த 204 பணியாளர்கள்!

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள ஈரானுக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் உள்ள...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வரண்ட வானிலை

இன்றையதினம் (06) நாட்டின் தென் மாகாணத்திலும், இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களிலும் சில...

ஈஸ்டர் தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே 3வது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரசு புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ்...

அசர்பைஜான் விமான நிலையம் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்

ஈரானின் ட்ரோன் தாக்குதலில் இருவர் காயமடைந்ததாக ஈரானுக்கு அசர்பைஜான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான்...