சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று நிபந்தனைகளை தவறவிட்ட இலங்கை

Date:

இலங்கையானது தனது வருமானத்தை பாதிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் கடமைகள் மூன்றை தவறவிட்டுள்ளது.

கடந்த மே மாத இறுதிக்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிததியத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நிதிப் பொதி தொடர்பாக நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகள் 100 இல் 29ஐ இலங்கையானது கடந்த மே மாத இறுதியில் நிறைவு செய்துள்ளதாக Verité Research தெரிவிக்கிறது.

இதேவேளை, இது தொடர்புபட்ட வேலைத்திட்டத்தின் பிரகாரம் கடந்த மே மாத இறுதிக்குள் மூன்று நிபந்தனைகளை நிறைவேற்றவேண்டுமென குறித்த Verité Researchஇன் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கைக்கு வருமானத்தைத் தரக்கூடிய IMFஇன் இரு நிபந்தனைகளைக்கூட அரசாங்கம் நிறைவேற்றத் தவறியுள்ளது.

பந்தயம் மற்றும் சூதாட்டங்களுக்கான அறவீட்டை அதிகரித்தல் மற்றும் மார்ச் 2023க்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதமாக வரி வருமானம் இருக்க என்கிற இரு நிபந்தனைகளையே அரசாங்கம் தவறவிட்டுள்ளது.

அதன்படி, பந்தயம் மற்றும் சூதாட்டத்திற்கான எதிர்பார்க்கப்படும் வருடாந்த வருவாயை 500மில்லியன் ரூபாவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பந்தயங்களுக்கான வருடாந்த வரி 1 மில்லியன் ரூபாவாக அதிகரிக்கவும், நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பின்றி மேற்கொள்ளப்படும் பந்தயங்களுக்கான வருடாந்த வரியானது 75,000 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ள அதேவேளை மொத்த வசூல் மீதான வரியை 15 வீதமாக உயர்த்துவது போன்ற நிபந்தனைகளை இலங்கை நிறைவேற்ற வேண்டியிருந்தது.

எனினும், தற்போது வரை குறித்த அந்த நிபந்தனையை இலங்கையால் நிறைவேற்ற முடியவில்லை எனவும் அதற்கான காரணம் பந்தயம் மற்றும் சூதாட்டங்கள் மூலம் வரி வசூல் செய்வதற்கான சட்டமூலமானது ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி வரை வரைவு செய்யப்பட்டதாகவும் எவ்வாறாயினும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் ‘The IMF Tracker’ தெரிவித்துள்ளது.

மேலும், சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் படி, இலங்கை ஆற்றவேண்டிய நிபந்தனைகளில் 29 வீதமானவை வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் 3 வீதமானவை இன்னும் நிறைவேற்றப்படவில்லை எனவும் 1 வீதமானவை பகுதியளவில் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் 6 வீதமானவற்றின் நிலை தொடர்பில் தகவல்கள் எதுவும் இல்லை எனவும் குறித்த அறிக்கையின் சாராம்சமாக அமைந்துள்ளது.

மேலும், 61 வீதத்தை இலங்கையானது நிறைவேற்ற வேண்டும் என ‘The IMF Tracker’ சுட்டிக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி,...

கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை.

பணிப்புறக்கணிப்பை தொடர்ந்து கடமைகளுக்கு வராமல் இருக்கும் தபால் ஊழியர்கள் மீது ஒழுக்காற்று...

2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் நவம்பரில் பாராளுமன்றத்திற்கு

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் பாராளுமன்றத்தில்...

அரசாங்கத்தின் சட்டமூலத்துக்கு எதிராக மேலும் மூன்று மனுத்தாக்கல்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த...