ஜிம்பாப்வே உலகக் கிண்ண மைதானத்தில் தீ விபத்து!

Date:

ஜிம்பாப்வேயில் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் பழமையான கிரிக்கெட் மைதானங்களில் ஒன்றான ஹராரே ஸ்போர்ட்ஸ் கழக வளாகத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர். செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் நெதர்லாந்திற்கு எதிராக ஜிம்பாப்வே 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, மைதானத்தின் தெற்கு முனையில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 3 இற்கும் அதிகமான குரூப் போட்டிகள், சூப்பர் சிக்ஸ் போட்டிகள் மற்றும் ஐசிசி உலகக் கிண்ண தகுதிச் சுற்றின் இறுதிப் போட்டிக்கு இந்த மைதானம் பயன்படுத்தப்படுமா? என ஆய்வுக்குப் பிறகு தான் தெரிய வரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...