ஒரு வருடத்திற்கு மேல் திரிபோஷ விநியோகம் இடைநிறுத்தம்: போஷாக்கு தொடர்பில் பாரிய சிக்கல்கள்

Date:

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரிபோஷ வழங்குவது ஓராண்டுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் குழந்தைகளின் போஷாக்கு நிலை தொடர்பில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

சோளத்தில் உள்ள அஃப்லாடோக்சின் சதவீத பிரச்சினை காரணமாக திரிபோஷ உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் தீப்தி குலரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் குழந்தைகளுக்கு மத்தியில் சமீபகாலமாக ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ள நிலையில், இது தொடர்பில் அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசாங்கத்தின் குடும்ப சுகாதார சேவைகள் சங்க தலைவர் தேவிகா கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு தங்குமிடமாக மற்றுவதற்கு நடவடிக்கை

கொழும்பு ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தை பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள 3,000 மக்களுக்கு...

24 மணித்தியாலயத்தில் கொழும்பு நகருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நீர்ப்பாசனத் திணைக்களம், சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய வெள்ளத்தால் அடுத்த 24 மணி...

களனி ஆற்றை அண்மித்து பாரிய வெள்ளம்

களனி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் அதனை அண்மித்த பகுதிகளில் வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு வெள்ள...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் மற்றும் விடைத்தாள்கள் குறித்து அச்சம் வேண்டாம்.

தொடர்ந்து நிலவக்கூடிய வானிலை நிலைமையை கருத்தில் கொண்டு, க.பொ.த. உயர்தரப் பரீட்சை...