போரில் காயமடைந்த சிரியாவைச் சேர்ந்த 500 பேர் புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம்!

Date:

போரில் காயமடைந்த சிரியா நாட்டைச் சேர்ந்த 500 பேர் இந்த வருடம் 2023 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற உள்ளனர்.
இவர்களுக்கான செலவுகளை சவூதி அரேபியாவைச் சேர்ந்த, ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபர் பொறுப்பேற்றுள்ளார்.

இவர் போரில் காயமடைந்த சுமார் 500 சிரிய யாத்திரிகர்களுக்கு நிதியுதவி அளித்துள்ளார்.

அவர்களின் பயணம் மற்றும் தங்குமிட செலவுகள், அத்துடன் பயண ஆவணங்கள் மற்றும் ஹஜ் அனுமதிகளை அவர் பொறுப்பேற்றுள்ளார்.

இதேவேளை  நான் என் கால்களை இழந்தேன், ஆனால் அவரது புனித கஃபாவை பார்வையிடும் வாய்ப்பை அல்லாஹ் எனக்கு ஈடுசெய்தான் என்று சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகிலுள்ள அட்மே முகாமில் வசிக்கும் எட்டு குழந்தைகளின் தந்தை இஸ்மாயில் அல்-மஸ்ரி கூறினார்.

நேற்றைய கனவு இன்று நனவாகியுள்ளது. நான் கஃபாவின் அருகே என் ஒற்றைக் காலில் நின்று அல்லாஹ்வின் எண்ணற்ற அருட்கொடைகளுக்கு நன்றி கூறுவேன். நான் இழந்த பாதத்திற்கு சொர்க்கத்தில் சிறந்ததை நஷ்டஈடாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறேன்” என்று அல்-மஸ்ரி கூறினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...