இலங்கை விமானப்படையின் 19ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ நியமிக்கப்படவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு நாளை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, 18ஆவது விமானப்படைத் தளபதியாக மூன்று வருடங்களுக்கு மேலாக பதவி வகித்த எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன நாளையுடன் சேவையிலிருந்து விலகவுள்ளார்.
57 வயதான எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரன கண்டி தர்மராஜா கல்லூரியின் பழைய மாணவராவார்.
1985 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து 38 வருடங்கள் பல விருதுகளையும் பதவி உயர்வுகளையும் பெற்று ஏர் மார்ஷல் பதவியை அடைந்தார்.
புதிய விமானப்படை தளபதியாக நியமிக்கப்படவுள்ள எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, 2022 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையின் புதிய தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
1