இலங்கை தெற்கு கடற்பரப்பில் பலமான நில அதிர்வு!

Date:

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் ஓரளவு பலமான நில அதிர்வு ஒன்று பதிவாகியுள்ளதாக பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு தெற்காக 1200 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கடியில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12:29 மணிக்கு குறித்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 5.8 மெக்னிடியூட் என்ற அளவில் உணரப்பட்டதாகவும் இதனால் இலங்கைக்கு எந்த பாதிப்புகளும் இல்லை எனவும் பூகோளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் தாக்கம் கொழும்பு, பத்தரமுல்ல, அக்குரஸ்ஸ, காலி ஆகிய பகுதிகளிலும் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

49வது சென்னை புத்தக கண்காட்சி: தமிழ் உலகின் மிகச்சிறந்த புத்தக கண்காட்சி ஜனவரி 8 முதல் 21 வரை சென்னை நந்தனம் அரங்கில்..!

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள YMCA மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தக விற்பனையாளர்கள்...

‘பிரதமர் பதவியில் மாற்றமில்லை’: அரசின் அறிவிப்பு சொல்வதென்ன? சிரேஷ்ட சட்டத்தரணி பாரிஸ் சாலி.

பிரதமர் பதவியில் மாற்றம் எதுவும் இல்லை என அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில், ...

SLMC யின் தீர்மானத்திற்கு நீதிமன்றம் இடைக்கால தடை!

கொழும்பு மாநகர சபை வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக...

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...