ஆற்றில் விழுந்து காணாமல் போன கொழும்பு யுவதி

Date:

திஹாரிய பிரதேசத்தில் அந்தககல்ல ஓய ஆற்றின் படித்துறைக்கு அருகில் செல்ஃபி எடுக்க முயற்சித்த 21 வயதான யுவதி கால் வழுக்கி ஆற்றில் விழுந்து காணாமல் போயுள்ளதாக நிட்டம்புவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு வாழைத்தோட்டம் குணசிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காணாமல் போன யுவதி தனது இரண்டு தோழிகளுடன் திஹாரிய பிரதேசத்தில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளதுடன் தோழிகளுடன் அந்தகல்ல ஓயாவுக்கு சென்றுள்ளார்.

அப்போது ஆற்றின்படித்துறையில் நின்று செல்ஃபி எடுக்க முயற்சித்த போது கால் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். பொலிஸார், கடற்படை சுழியோடிகள் மற்றும் பிரதேவாசிகள் காணாமல் போன யுவதியை தேடி வருகின்றனர்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...