அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் பாகிஸ்தான் பிரஜையொருவர் மரணம்!

Date:

அங்குனுகொலபெலஸ சிறைச்சாலையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பாகிஸ்தான் பிரஜையொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக கைதுசெய்யப்பட்ட நிலையில் சிறையில் வைக்கப்பட்டார்.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் திடீர் சுகவீனம் காரணமாக காலி, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.

59 வயதான மொஹமட் நதீம் என்பவரே இவ்வாறு உயிரிழந்தவர் என்பதுடன், நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் 2019 ஆகஸ்ட்டில் அவருக்கு எதிராக ஆயுள் தண்டனை விதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 பேரின் உடல்கள் இன்று தாய்நாட்டுக்கு!

காலி கடற்பரப்பில் தாக்குதலுக்குள்ளான ஈரானிய கப்பலில் உயிரிழந்த 84 ஈரானியர்களுள் 45...

2026ல் 6 இலட்சத்தை கடந்த வெளிநாட்டு பயணிகளின் வருகை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு...

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஒன்லைன் மோசடி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

பண்டிகை காலம் நெருங்கி வருவதால், ஒன்லைன் விளம்பரங்களில் ஈடுபடும்போது மக்கள் எச்சரிக்கையாக...

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல...