வௌிநாட்டு தொழில் சந்தையில் அதிகரிக்கும் இலங்கையர்கள்!

Date:

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் குழு பணியகத்தில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக அதன் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டில் சுமார் 311,000 பேர் வெளிநாட்டு வேலைகளுக்கு சென்றிருந்ததாகவும்,  முக்கியமாக கட்டார், குவைத், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளுக்குச் செல்லும் போக்கு அதிகரிகத்து இருப்பதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, ருமேனியாவுக்கும், ஜப்பானுக்கும் அதிகப்படியான வௌிநாட்டு தொழிலாளர்கள் செல்கின்றனர்.

மொத்தத்தில் இலங்கையர்கள் தொழிலுக்காக வௌிநாடு செல்வது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. எவ்வாறாயினும்,  திறமையான தொழிலாளர்களை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு அனுப்ப எதிர்ப்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...