இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும்!

Date:

பொருளாதாரம் வலுவடைவதன் மூலம் இறக்குமதி கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட நாட்டின் நிலைமை கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கைக்கு தற்போது சிறந்த மரியாதை உள்ளது .இலங்கை நிலையான வளர்ச்சியை அடைவதற்கு சில சீர்திருத்தங்கள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும்.

சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் சர்வதேச அமைப்புகளும் ஏனைய நாடுகளும் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

கடனை திருப்பி செலுத்துவதற்கு இந்திய அரசாங்கம் நீண்ட கால அவகாசம் வழங்கியுள்ளதாகவும் அதேவேளை சர்வதேச நிறுவனங்களின் உதவியை அரசாங்கம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டை விட விடயங்கள் கணிசமாக மேம்பட்டுள்ளதாகவும் மக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

பொருளாதாரம் சரியான திசையில் செல்வதால், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் உட்பட எஞ்சியுள்ள கட்டுப்பாடுகள் எதிர்வரும் காலங்களில் தளர்த்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...