உக்ரைன் பாடசாலையின் மீது தாக்குதல் – போர்க்குற்றம் புரிந்த ரஷ்யா!

Date:

தெற்கு உக்ரைனின் சபோரிஜியா மாகாணத்தில் உள்ள பாடசாலையில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தன.

அப்போது அந்த பாடசாலையின் மீது ரஷ்யா திடீரென டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் பல இடங்களில் நடந்த தாக்குதலில் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. பாடசாலையின் மீது நடந்த இந்த டிரோன் தாக்குதல் குறித்து அந்த மாகாண கவர்னர் யூரி மலாஷ்கோ ரஷ்யா மீண்டும் போர்க்குற்றம் புரிந்ததாக கூறினார்.

இதற்கு முன்னரும் ரஷ்யா ஏற்கனவே பலமுறை இதுபோன்ற போர்க்குற்றங்களை செய்ததாக உக்ரைன் குற்றச்சாட்டியது.

அதன்பேரில் கடந்த மார்ச் மாதம் ரஷ்ய ஜனாதிபதி புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து ஹேக் நகரில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதேபோல் உக்ரைன், எஸ்டோனியா, லிதுவேனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளிலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

இன்றையதினம் (24) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...

பிரபல மார்க்க அறிஞர் அஷ்ஷெய்க் எஸ்.எச். ஆதம்பாவா (மதனி எம்.ஏ.) அவர்களுக்கான கௌரவிப்பு விழா.!

அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து அதன் செயலாளராகவும் உபதலைவராகவும்...

உதிரம் கொடுத்து உயிரைக் காப்போம்: மாபெரும் இரத்த தானம் நிகழ்வு!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா புத்தளம் நகரக் கிளை, புத்தளம் பெரிய...

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு ஜனாதிபதி சுற்றாடல் வெள்ளி விருது

விடியல் இணையத்தள பிரதம ஆசிரியர் றிப்தி அலிக்கு மத்திய சுற்றாடல் அதிகார...