இந்த ஆண்டில் 1126 வாகன விபத்துக்கள் பதிவு : 1192 பேர் மரணம்

Date:

இவ்வாண்டில் ஆரம்பம் தொடக்கம் இது வரையில் வாகன விபத்துக்களால் 1192 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவ்வருட ஆரம்பத்தில் இருந்து ஜூலை மாதம் 9ஆம் திகதி வரையில் பதிவான வாகன விபத்துக்களில் பொலிஸாருக்கு பதிவான வாகன விபத்துக்கள் தொடர்பில் அவதானத்தை செலுத்தும் போது, அவற்றில் பெரும்பாலானவை வாகன சாரதிகளின் கவனயீனத்தால் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய 1126 விபத்துக்கள் நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.

மிகக் குறுகிய வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் வாகனம் செலுத்துவதனாலும் போக்குவரத்து விதிகளை கடைப்பிடிக்காத காரணத்தினாலும் அண்மைய நாட்களில் பல விபத்துக்கள் பதிவாகி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடித்தால், வருடந்தோறும் ஏற்படும் வீதி விபத்துக்கள் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...