ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை தருஷி!

Date:

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தருஷி கருணாரத்ன, 800 மீற்றர் போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய ஆசிய சாதனையை தன்வசமாக்கினார்.

இதேவேளை இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...