ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய சாதனை படைத்த இலங்கை வீராங்கனை தருஷி!

Date:

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை வீராங்கனை தருஷி கருணாரத்ன தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

24ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைப்பெற்று வருகிறது.

இந்த நிலையில், போட்டியின் நான்காவது நாளான இன்று பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப்போட்டியில் தருஷி கருணாரத்ன தங்கப்பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.

தருஷி கருணாரத்ன, 800 மீற்றர் போட்டித் தூரத்தை 2.00.66 நிமிடங்களில் நிறைவு செய்து புதிய ஆசிய சாதனையை தன்வசமாக்கினார்.

இதேவேளை இப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...