புத்தளத்திற்கு பெருமை தேடி தந்த உலகக்கிண்ண வீரர்களுக்கான வரவேற்பு நிகழ்வு!

Date:

உலக கிண்ண ஸெபக்தக்ரோ வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (18) புத்தளத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய வீரர்களை  வரவேற்கும் நிகழ்வும் வீதி ஊர்வலமும் மாலை 4.00 மணி – 6.00 மணி வரை புத்தளம் நகர மத்தியில் நடைபெறும்.

Kumpulan De Malayu Puttalam மற்றும் Malay Sports Club இந்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளன.

இவ்வீரர்களை வரவேற்கும் நிகழ்வு சிறுவர் பூங்காவிற்கு அருகில் சமய குருக்கள், அரச மற்றும் நிருவாகத்துறை அதிகாரிகள், சமூகத் தலைவர்கள், சர்வ மதத்தலைவர்கள் ஆகியோரின் பங்களிப்புடன் நடைபெறவுள்ளது.

வரவேற்பு நிகழ்வைத் தொடர்ந்து புத்தளம் நகர மத்தியில் ஊர்வலமாக அழைத்து வந்து, அல்-குர்ஆன் நினைவு கோபுரத்தின் முன்னால் மக்கள் சந்திப்புக் கூட்டத்துடன் நிறைவுபெறும்.

 

Popular

More like this
Related

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...

சதாம் உசேன் முதல் அலி கமேனி வரை: அமெரிக்காவின் இரட்டை வேடமும் சர்வதேச நீதியும்.

'அல்லாஹ்வின் பாதையில் இறந்தவர்களை 'மரணித்தவர்கள்' என்று கூறாதீர்கள். ஏனெனில் அவர்கள் உயிருடனேயே...

இந்தியப் பிரதமர் மோடியை சந்தித்தார் அமைச்சர் விஜித ஹேரத்!

‘ரைசினா கலந்துரையாடல் 2026’ (Raisina Dialogue 2026) மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா...

ஈரானியக் கப்பல் விவகாரம்: மனிதாபிமான அடிப்படையில் இலங்கை தன்னிச்சையான முடிவை எடுத்துள்ளது: ஜனாதிபதி

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் நிலைகொண்டுள்ள 'IRIS Bushehr' என்ற ஈரானியக் கப்பலில்...