இஸ்லாமிய புதுவருடம் புதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கின்றது: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Date:

ஹிஜ்ரி 1445, இஸ்லாமிய புத்தாண்டின் உதயமானது சமாதானம், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்கான புதிய நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் எமக்கு அளிப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இச் சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்த சமய மற்றும் கலாசார அமைச்சின் ஒத்துழைப்புடன் சவூதி அரேபிய தூதரகம் அண்மையில் நடாத்திய அல் குர்ஆன் மனனப் போட்டி, எமது இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல் உறவுகளை வளர்ப்பதற்கும், இஸ்லாமிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறேன் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈரான் கப்பல் மீட்பு விவகாரம்: இலங்கை அரசுக்கு ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

ஈரான் கப்பலையும் அதிலிருந்தவர்களையும் மீட்பதற்காக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தலையீட்டை ஐக்கிய...

மாத்தறையில் சர்வதேச மகளிர் தின விழா!

நாளை (8) நளைபெறவுள்ள சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும்...

ஈரான் மாலுமிகள் தொடர்பில் இலங்கை சர்வதேச சட்டங்களைப் பின்பற்றும்!

இலங்கையின் பொறுப்பிலுள்ள ஈரான் மாலுமிகள் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் கடல் சட்ட...

ஈரானிய கப்பலில் இருந்து மீட்டவர்களை திருப்பி அனுப்ப கூடாது: இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தல்

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையில்...