இஸ்லாமிய புதுவருடம் புதிய நம்பிக்கைகளை எமக்கு அளிக்கின்றது: இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர்

Date:

ஹிஜ்ரி 1445, இஸ்லாமிய புத்தாண்டின் உதயமானது சமாதானம், நல்லிணக்கம் மற்றும் செழிப்புக்கான புதிய நம்பிக்கைகளையும் அபிலாஷைகளையும் எமக்கு அளிப்பதாக இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது இச் சந்தர்ப்பத்தில், இலங்கை மக்களுக்கு எனது அன்பான நல் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

புத்த சமய மற்றும் கலாசார அமைச்சின் ஒத்துழைப்புடன் சவூதி அரேபிய தூதரகம் அண்மையில் நடாத்திய அல் குர்ஆன் மனனப் போட்டி, எமது இரு நாட்டு மக்களுக்கும் இடையே நல் உறவுகளை வளர்ப்பதற்கும், இஸ்லாமிய விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமையும் என நம்புகிறேன் எனவும் தூதுவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...