உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாயை பயன்படுத்த பரிசீலனை: அலி சப்ரி

Date:

உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ இந்திய விஜயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்திய ரூபாவை பொது பணமாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

இந்திய ரூபாவின் நேரடி பயன்பாட்டை அனுமதிப்பது இந்திய சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமநிலையின்மை இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதால், இந்திய ரூபாயை ஏற்றுக்கொள்வது இலங்கைக்கு சாதகமாக அமையும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகள் மேலும் வலுவடையும் .

எனவே உள்ளூர் வர்த்தக பரிவர்த்தனை நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவது வர்த்தக ரீதியில் இரு நாட்டுக்கும் நன்மை பயக்கும் என அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இதேவேளை, இலங்கையின் மொத்தக் கடன் 83 பில்லியன் டொலர்களைத் தாண்டியுள்ளது, இதில் 41.5 பில்லியன் டொலர் வெளிநாட்டு மற்றும் 42.1 பில்லியன் டொலர் உள்நாட்டு கடன். இலங்கை தற்போது தனது கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கட்டாரிலுள்ள அனைத்து இலங்கையர்களும் கூடுதல் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டுகோள்

கட்டார் இராச்சியத்திலுள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு வலயத்தில் நிலவும்...

பிலிப்பைன்ஸ் சென்றார் பிரதமர்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அழைப்பிற்கிணங்க பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்றிரவு...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக வரண்ட வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் தென் மாகாணத்திலும் இரத்தினபுரி, கொழும்பு, களுத்துறை மாவட்டங்களிலும்...

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக நான்கு இலங்கையர்கள் காயம்!

மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் காரணமாக மொத்தம் நான்கு இலங்கையர்கள்...