புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை!

Date:

இலங்கை புகையிரத திணைக்களத்தை இலாபம் ஈட்டும் அதிகார சபையாக மாற்றுவதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

குறித்த யோசனையை போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணையை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க குழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் உள்ள ரயில் சேவைகளை ஆய்வு செய்யவுள்ள இந்தக் குழு ஜனாதிபதியின் செயலாளரின் தலைமையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த முன்மொழிவை மதிப்பீடு செய்து பின்னர் அந்த குழு தேவையான பரிந்துரைகளை வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...