இலங்கையில் பிறந்த பிபிசி செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா காலமானார்!

Date:

இலங்கையில் பிறந்த பிபிசியின் செய்தி வாசிப்பாளர் ஜோர்ஜ் அழகையா தனது 67வது வயதில் காலமானார்.

பிபிசியின் சிறந்த பத்திரிகையாளர்களில் ஒருவரான அவர், இரண்டு தசாப்தங்களாக பிபிசி செய்தியை தயாரித்து வழங்கியதுடன், வெளிநாட்டு நிருபராக நீண்ட காலம் பணியாற்றியிருந்தார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கொழும்பில் பிறந்நத ஜோர்ஜ் அழகையா கானாவிற்கு குடிபெயர்ந்த பின்னர் பிரித்தானியாவில் குடியேறினார். சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் அவர் பிபிசியில் பணியாற்றியுள்ளார்.

சோமாலியா, ஈராக், ருவாண்டா உள்ளிட்ட நாடுகளில் அவர் பணியாற்றியுள்ளார். 1990களின் ஆரம்பத்தில் சோமாலியாவில் பஞ்சம் மற்றும் போர் குறித்த செய்திகளிற்காக ஜோர்ஜ் அழகையா விருதுகளை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...