இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம்!

Date:

இலங்கையில் ஒலிவ் பயிர்ச்செய்கையை அறிமுகப்படுத்துவது குறித்து விவசாய அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சு, இலங்கையில் ஆலிவ் பயிர்ச்செய்கைக்கு ஏற்ற காலநிலையுடன் கூடிய பிரதேசங்கள் இருப்பதாகவும், அதற்கமைய அதற்கான சாத்தியக்கூறு ஆய்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் 19வது அமர்வு இத்தாலியின் ரோம் நகரில் இந்த நாட்களில் நடைபெறவுள்ளதுடன், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவும் இதில் கலந்துகொண்டுள்ளார்.

இதன்படி, இந்த நாட்டில் ஒலிவ் பயிர்ச்செய்கையை விஸ்தரிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்குமாறு இத்தாலியின் விவசாய அமைச்சருடனான கலந்துரையாடலில் அமைச்சர் மஹிந்த அமரவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கு மேலதிகமாக, இலங்கையின் மண் அமைப்புக்கு ஏற்ற திராட்சை வகை அறிமுகம், கால்நடை வளர்ப்பு முறைகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சி நிபுணர்களின் பரிமாற்றம், இத்தாலியில் இருந்து இலங்கையுடன் கால்நடைகளை பரிமாறிக்கொள்வதற்கான ஏற்பாடு, உணவு உற்பத்தி மற்றும் விவசாயத்துறையில் நிலையான அபிவிருத்தி போன்ற விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.

Popular

More like this
Related

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...

ஊடக சுதந்திரத்துக்கு நேரடி தாக்குதல்; காசா  ஊடகவியலாளர்களின் படுகொலையை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வன்மையாகக் கண்டிக்கிறது

அல் ஜஸீரா வலையமைப்புக்காக காசா விலிருந்து கடமையாற்றி வந்த சிரேஷ்ட செய்தியாளர்...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி...