சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணிகள் மீண்டும் திணைக்களத்திற்கு!

Date:

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வெஹரஹெர சாரதி அனுமதிப்பத்திரம் அச்சடிக்கும் பிரிவின் பணிகள் எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி முதல் பொறுப்பேற்கவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஒப்பந்தத்தின் பிரகாரம் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் திணைக்களம் பல வருடங்களாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்ததாகவும் அந்த ஒப்பந்தம் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மோட்டார் போக்குவரத்து திணைக்கள அதிகாரிகள் தற்போது திணைக்களத்தின் பணிகள் குறித்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவித்த நிஷாந்த அனுருத்த வீரசிங்க, அதன் பின்னரே அந்த அதிகாரிகள் அங்கு பணிக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...