குழந்தைகளுக்கான தடுப்பூசி தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை: வைத்தியர் தீபால் பெரேரா!

Date:

குழந்தைகளுக்கான தடுப்பூசி பெற்றுக் கொடுக்க அஞ்ச வேண்டாம் என கொழும்பு லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் நிபுணத்துவ மருத்துவர் பெற்றோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசி வகைகளை ஏற்றுக் கொள்ளாமை பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக தடுப்பூசிகளை முறையாக பெற்றுக்கொள்ளாத 20 குழந்தைகளுக்கு அம்மை நோய் பரவியுள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அம்மை, போலியோ உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தடுப்பூசி பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என தெரிவிக்கப்படுகிறது.

கர்ப்பிணி தாய் ஒருவருக்கு ஜெர்மன் அம்மை நோய் தொற்று பரவினால் பிறக்கும் குழந்தைகளுக்கு பல்வேறு ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முறையாக ஊசிகளை ஏற்றிக்கொள்ள தவறினால் 1940-50களில் போன்று போலியோ போன்ற நோய்களுக்கு தனியான நோயாளர் சிகிச்சை பிரிவுகளை உருவாக்க நேரிடும் என வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...