சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்த நடவடிக்கை: இ.போ.ச தீர்மானம்

Date:

சாரதிகளினால் மேற்கொள்ளப்படும் தவறுகளை ஆவணப்படுத்தும் திட்டத்தினை ஆரம்பிப்பதற்கு இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

விபத்துகளை தடுப்பதற்கும், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் மேற்கோளோளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, பரிசோதனை புத்தகமொன்று அறிமுகப்படுத்தப்படுமென இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.

நாட்டில் அண்மையில் சம்பவித்த விபத்துகளை கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் விபத்து விசாரணை பிரிவு முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இதுவரை பதிவு செய்யப்பட விபத்துகளில் 218 விபத்துகள் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்கள் மூலம் இடம்பெற்றவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விபத்துகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...