மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

 மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாத்திரம் மின்சார கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்வது அரசாங்கத்தின் தீர்மானம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், திட்டமிட்டபடி தடையின்றி மின் விநியோகத்தினை மேற்கொள்வதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனிடையே, இலங்கை மின்சாரசபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்துடன் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், தடையின்றி மின் விநியோகத்தை அமுல்படுத்துவது மற்றும் விவசாயத்திற்குத் தேவையான அதிகபட்ச நீரை உறுதி செய்வது தொடர்பில் இன்றைய தினம் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்படவுள்ளது எனவும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...