வறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு!

Date:

நாட்டில் நிலவும் வறட்சியான சூழ்நிலையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அனுமதியளித்துள்ளார்.

இந்த விடயத்தை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

“பயிர் சேதத்தை மதிப்பிடுவதற்கு விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, எம்பிலிபிட்டிய விவசாயிகளுக்கு விவசாய நடவடிக்கைக்கென வெலி ஓயாவிலிருந்து குறிப்பிட்டத்தக்க அளவு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதன்மூலம் அவர்களின் விவசாய நிலபரப்பில் 15 முதல் 20 வீதம் வரையான பயிர் நிலங்களுக்கு பாதுகாப்பை வழங்கமுடியும்” என எதிர்பார்க்கப்படுகின்றது.

நெற்பயிர்கள் கதிர் விடத் தொடங்கியுள்ள நிலையில் வயல்களுக்குத் தண்ணீர் வழங்கக் கோரி எம்பிலிப்பிட்டி விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...