பாராளுமன்றத்தில் பெண் பராமரிப்பு பணியாளர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

Date:

பாராளுமன்றத்தின் பராமரிப்பு திணைக்களத்தில் பணிபுரியும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் வெளியாகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்ன தெரிவித்தார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்விலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

பராமரிப்புத் துறையில் பெண்களுக்கு இதுபோன்ற பாலியல் துன்புறுத்தல்கள் நடந்ததாக தமக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி, குறித்த பெண்களிடம் எந்தவொரு பாலியல் துன்புறுத்தலும் நடக்கவில்லை என்று கடிதங்கள் மற்றும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீரவின் மேற்பார்வையில் மூன்று சிரேஷ்ட அதிகாரிகள் அடங்கிய குழுவினால் விசாரணை நடத்தப்படும் என ரோகினி குமாரி விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணைக் குழு 7ஆம் திகதி முதல் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தார்.

Popular

More like this
Related

எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்காக, முடிந்தவரை...

நெதன்யாகு எங்கே? இஸ்ரேல் பிரதமர் குறித்து பரவும் மர்மம்: ஈரான் ஊடகம் எழுப்பும் அடுக்கடுக்கான கேள்விகள்.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உயிரிழந்திருக்கலாம் அல்லது படுகாயமடைந்திருக்கலாம் என்ற யூகங்கள்...

பல்துறை அறிஞர் பேராசிரியர் நகீப் அத்தாஸ் மறைந்தார்.!

பொதுவாக அறிவுலகத்திற்கும், உலக முஸ்லிம் சமூகத்திற்கும் பெரும் அறிவுப் பங்களிப்பை வழங்கிய...

வாகன இலக்கத் தகடு : புதிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்து

மோட்டார் வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை அச்சிடும் பணியைப் புதிய நிறுவனமொன்றிடம் ஒப்படைப்பதற்கான...