மீண்டும் அரகலய?: ஜனாதிபதிக்கு கிடைத்த புலனாய்வு அறிக்கை!

Date:

2022 ஆம் ஆண்டு மே மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்றதைப் போன்று பொது அமைதியின்மையை ஏற்படுத்தும் மற்றொரு முயற்சி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு புலனாய்வு அறிக்கைகள் கிடைத்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

செவ்வாய்க்கிழமை ( 08) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பில்  உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நிலவும் வறட்சி, மின்சார நெருக்கடி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு போன்ற காரணங்களை முன்னிறுத்தி அரகலய இயக்கத்தில் ஈடுபட்டுள்ள சிலர் எதிர்கட்சிகளுடன் இணைந்து மீண்டும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது

விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளை சுற்றி வளைக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், இவ்வாறான தாக்குதல்களை தடுக்க விசேட பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டார்.

வறட்சியால் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடி மற்றும் விவசாயிகளின் போராட்டத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி வன்முறையை மீண்டும் கொண்டு வருவதற்கு சில ஊடக நிறுவனங்களும் பின்னணியில் இருப்பதாக குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் மரணம்.

பிரபல ஊடகவியலாளர் இக்பால் அதாஸ் இயற்கை எய்தியுள்ளார். 81 வயதான அவர்...

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...