நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று இராஜினாமா?

Date:

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இராஜினாமாவை சமர்ப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு அதிபர் ஆரிஃப் அல்விக்கு புதன்கிழமை கடிதம் எழுத உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

ஷாபாஸ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்தால், இடைக்கால அரசாங்கம் நாட்டின் பொறுப்பை ஏற்கும்.

நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமரின் ஆலோசனையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...