நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை: பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இன்று இராஜினாமா?

Date:

பாகிஸ்தான் அரசியலுக்கு இன்று மிக முக்கியமான நாள். கடும் பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வரும் பாகிஸ்தான், இப்போது அரசியல் ஸ்திரத்தனமை தொடர்பான பிரச்சனைகளையும் எதிர் கொள்ளும் நிலையில் உள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் புதன்கிழமை தனது இராஜினாமாவை சமர்ப்பிக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமையிலான கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் இந்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளுக்கு கூடுதல் அவகாசம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்குமாறு அதிபர் ஆரிஃப் அல்விக்கு புதன்கிழமை கடிதம் எழுத உள்ளதாக ஷெபாஸ் ஷெரீப் செவ்வாய்க்கிழமை அன்று தெரிவித்தார்.

ஷாபாஸ் ஷெரீப் தனது பதவியை இராஜினாமா செய்தால், இடைக்கால அரசாங்கம் நாட்டின் பொறுப்பை ஏற்கும்.

நாடாளுமன்ற கீழவையின் ஐந்து ஆண்டு பதவிக்காலம் ஆகஸ்ட் 12ம் திகதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில், பிரதமரின் ஆலோசனையை அதிபர் அல்வி ஏற்றுக் கொண்டால் 48 மணி நேரத்திற்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

பாகிஸ்தானில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால், 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தை கலைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் பிரதமர் பதவியை இராஜினாமா செய்ய வாய்ப்புள்ளது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...