13வது அரசியலமைப்புத் திருத்தச்சட்டம் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வை தேடும் போது முஸ்லிம் பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் நேற்று பாராளுமன்றத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரசிங்கவிடம் கோரிக்கை விடுத்தார்.
ஜனாதிபதி நேற்று பாராளுமன்றத்தில் விசேட உரையை நிகழ்ச்சிய பின்னர், ஹக்கீம் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அதிகாரங்களை பகிர்வது, அபிவிருத்தி, சட்ட ரீதியான விடயங்கள் சம்பந்தமான ஜனாதிபதி தெளிவுப்படுத்தினார்.
இந்த சந்தர்ப்பத்தில் இரண்டாவது விடயம் குறித்து சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
வடக்கு, கிழக்கு தேர்தல் தொடர்பான விடயங்களை முன்வைக்கும் போது, முஸ்லிம்களும் அதில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். நாங்கள் உங்களுடன் (ஜனாதிபதி) நேரடியாக இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவோம் என கூறியுள்ளார்