அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 10 பேருக்கு தடை!

Date:

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் மதுசான் சந்ரஜித் உள்ளிட்ட 10 பேருக்கு கொழும்பு கோட்டை பகுதியின் பல இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு முன்பாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என பொலிஸாரால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், நிதியமைச்சு, காலிமுகத்திடல், மற்றும் அலரி மாளிகை உள்ளிட்ட , இடங்களுக்குள் உட்பிரவேசிப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அமைதியான முறையில் போராட்டங்களை நடத்த முடியும் என கோட்டை நீதவான் திலின கமகே தெரிவித்தார்.

நீதிமன்ற உத்தரவை மீறும் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு அதிகாரம் உள்ளதாகவும் நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...