நாட்டில் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு!

Date:

நாட்டில் சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி, நாட்டின் முட்டைத் தேவையில் மூன்றில் ஒரு பங்கையே தற்போது இறக்குமதி செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாளொன்றுக்கு 85 இலட்சம் முட்டைகள் தேவைப்படுவதாகவும், அதில் சுமார் 55 இலட்சம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

” நாளொன்றுக்கு சுமார் 35 இலட்சம் முட்டைகளுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், நாளொன்றுக்கு 10 இலட்சம் அல்லது தேவையில் மூன்றில் ஒரு பங்கையே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி கிடைத்துள்ளது.

நாட்டில் வருடாந்தம் 2,80,000 டன் கோழி இறைச்சிக்கு தேவை உள்ளது, மாதாந்தம் 20,000 டன் கோழி இறைச்சி நுகர்வு செய்யப்படுகிறது.

நாட்டில் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்ய கோழி இறைச்சி உற்பத்தி இல்லை என்பதால் அவற்றையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு மாதாந்தம் 22,000 டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்ட போதிலும், 2023 ஆம் ஆண்டளவில் அது 17,000 டன்னாக குறைவடைந்த காரணத்தினால் கோழி இறைச்சியை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.

கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் நுகர்வோரை சுரண்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதால் சந்தையில் ஓரளவு சமநிலையைப் பாதுகாத்து நுகர்வோரையும் பாதுகாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் உற்பத்தியாளர்கள், சந்தை நடத்தை மற்றும் நுகர்வோரின் தேவைகளுக்கு இடையில் சமநிலை ஏற்படும் வகையில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அது அமைச்சரின் தனிப்பட்ட விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளப்படாது ” எனவும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

சுரேஷ் சலே நீதிமன்ற வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்...

இலங்கையில் முகத்தை வெண்மையாக்கும் கிரீம் பயன்படுத்துபவர்களுக்கு நுகர்வோர் விவகார அதிகார சபை எச்சரிக்கை!

நுகர்வோர் விவகார அதிகார சபை பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இலங்கை சந்தையில்...

பிரிமா கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

பிரிமா (Prima) நிறுவனத்தினால் கோதுமை மாவின் விலை இன்று (29) முதல்...

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இன்று நீதிமன்றத்தில் ஆஜர்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்று (29) நீதிமன்றத்தில்...