ஏறாவூரில் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று அனுஷ்டிப்பு!

Date:

1990 ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ம் திகதி தமீழீழ விடுதலைப்புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட 121 முஸ்லீம்களை நினைவுகூறும் 33 வது சுஹதாக்கள் தினம் இன்று ஏறாவூரில் அனுஷ்டிக்கப்படுகிறது.

பொதுச்சந்தை,வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு வெள்ளைக்கொடி எங்கும் பறக்கவிடப்பட்டுள்ளது.

இன்று காலை 6 மணிக்கு நூறுஸ்ஸலாம் பள்ளிவாயலில் துஆ பிராத்தனையுடன் ஆரம்பிக்கப்பட்டு அமைதிப் பேரணியும் இடம்பெற்றதுடன் நிகழ்வின் முடிவில் ஏறாவூர் பிரதேச செயலாளர் திருமதி நிஹாரா மௌஜூத் அவர்களிடம் சுஹதாக்கள் நினைவுப் பேரவையினால் மஹஜர் ஒன்றும் நகரசபை வளாகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியல் பிரமுகர்கள்,உலமாக்கள்,கல்விமான்கள், ஊர்பிரமுகர்கள்,மத்ரஸா மாணவர்கள் என பெருந்திரளான பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

உமர் அறபாத்

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...